Wednesday, November 26, 2014

PAATHAI - Palanibharathi பாதை - பழநிபாரதி

PAATHAI - Palanibharathi பாதை - பழநிபாரதி

பாடலாசிரியரும் கவிஞருமான பழநி பாரதி, தாஜ்நூரின் இசையோடு இணைந்து இன்றைய நாளில் எழுதியிருக்கும் வரிகள்,
வரலாற்றின் பொருள் கூறுகின்றன. பழநிபாரதி படைத்திருக்கும் "பாதை" யினை இங்கே காணலாம்.

courtesy 

தன்னிகரில்லா தமிழன்

தன்னிகரில்லா தமிழன்
சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!
* * * * *
இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!
---------- தெய்வத்திரு கவிஞர் வாலி...

Tuesday, September 16, 2014

டேய் நண்பா எங்கடா இருக்கே இப்போ ?


இப்போ எல்லாம்  நீ போன் ல கூட பேசுறது இல்ல கூகிள் ல சாட் பண்றது இல்ல .. ஆனா நான் உன்ன மறந்தாலும் ஏதோ ஒரு வடிவத்துல உன் ஞாபகம் வர வச்சிரங்க ...

கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி காலைல இருந்து நைட் வரைக்கும் வேணாம் வேணாம் னு ஓடுனாலும் விடாம எனக்கு தெரிஞ்ச கல்யாணம் ஆகாத பொண்ணுக பத்தி கேட்டு கேட்டு கூகிள் ல சாட் செய்வியே?

எங்க ஊரு புள்ளைக கிட்ட என் ப்ரென்ட் நல்லவரு, வல்லவரு னு சொல்ல சொல்லி எனக்கும் “லவ் டார்ச்சர்” கொடுத்தியே ?

 எங்க ஊரு டவுன் பஸ்ல “அலர்ஜி , ஆஸ்த்மா, நரம்பு தளர்ச்சி, எய்ட்ஸ்  .... க்கு உடனே தீர்வு ...அணுகவும் டாக்டர் X ...  னு ஒவ்வேருத்தர் மடியுலும் வேணும்னாலும் வேணாம்னாலும் பிட் நோட்டீஸ் வச்சிட்டு போறவன் மாதிறி,  கல்யாணம் ஆகாத பொண்ணுங்க எல்லாத்துக்கும்  கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம ஒரு பிட் நோட்டீஸ் குடுத்தியே ... உனக்கு ஞாபகம் இருக்க இல்லையோ எனக்கு நல்லவே இருக்கு...

உனக்கு கல்யாணம் னு கேள்வி பட்டதும் சந்தோஷ பட்டது கல்யாணம் ஆகாத பொண்ணுங்க மட்டும் இல்ல ...நானும் தான் ...

ஏண்ணா, சார் உங்க ப்ரென்ட் எனக்கும் அப்ளிகேசன் குடுத்தார் ... எனக்கும் அப்ளிகேசன் குடுத்தார்... னு இனி யாரும் சொல்லமாட்டங்க னு ...
ரொம்ப சந்தோஷ பட்டேன்

 ஆனா...

அந்த சந்தோசம் ரொம்ப நாள் நிலைக்கல ...

சமிபத்துல கல்யாணம் ஆகி குழந்தையோட இருந்த ஒரு பொண்ணு பேசும் போது சார் உங்க பிரெண்ட எனக்கும் தெரியும் ... அவரு “தமிழ் மேட்ரிமோனி” ல எனக்கும் இண்டரெஸ்ட் அனுப்பினார் ... னு சொன்னப்ப இருந்த நிம்மதி யும் போச்சி ...

இப்போ ஒரு குழந்தையோட இருக்கிற பொண்ணுங்கள பாத்தாவே உண் பேர சொல்ல பயமா இருக்குட ...

டேய் நண்பா எங்கடா இருக்கே இப்போ ?


Tuesday, August 12, 2014

நல்ல திட்டுங்க


“ ஈழத்தில் நடந்தது போர் குற்றம் அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...

“ஈழத்தில் நடந்தது இன படுகொலை அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...

“ ராஜபக்சே செய்தது சரியே “ 
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும்

ஈழ தமிழகளுக்கு சம உரிமை பற்றி வாய் திறக்காத ஓநாய்களும், தந்திர நரிகளும்...

தமிழ் உணர்வையும் , இருக்கிற கொஞ்ச நஞ்ச உணர்வாளர்களையும்
ஒடுக்க


சூழ்ச்சி செய்ய தக்க தருணம் பாத்து காத்து கொன்டிருந்த

ஓநாய் களுக்கு 


நல்ல வாய்ப்பு
சீமான் பற்றி அவதூரு பரப்புரை செய்ய

எதற்க்கெடுத்தாலும் லைக் போட்டு share  செய்யும்  facebook  தமிழர்களே!


நல்ல திட்டுங்க

சீமான் னையும் ,

 நெடுமாறனையும்,

 வைகோவையும் ..

உங்கள் கொள்ளு பேரனுக்காக காத்திருகிறது ....


ஸ்டாலலினின்  கொள்ளு பேரன்
தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிர பிரதமருக்கு கடிதம் ,

ஸ்டாலலினின்  கொள்ளு பேரன் 1 மணி நேர உண்ணாவிரதம் ,

ஸ்டாலலினின்  கொள்ளு பேரன் கொட்டும் மலையில்

ஈழ தமிழருக்காக மனித சங்கிலி னு ...

மதவாதிகள்!

மதவாதிகள்!

காற்றுக்கு வர்ணம் பூச துடிப்பவர்கள் .

செந்தில் 
13/08/2014