Saturday, December 26, 2009

இரண்டாம் உலக போர் - சில படங்கள்















நன்றி : vijaybalaji2001@gmail.com

BP சார்ட்

Blood Pressure சர்ட்

Normal Blood Pressure Range

Systolic vs. Diastolic Blood Pressure Range - millimeters of மெர்குரி

Human Blood Pressure Range Diagram
The 1st Number: Systolic pressure is the pressure generated when the heart contracts.
The 2nd Number: Diastolic pressure is the blood pressure when the heart is relaxed.

What is Normal Blood Pressure? Buy and use a blood pressure monitor. Compare your BP reading with the numbers on the chart above. Draw a line from your systolic pressure to your diastolic pressure. Is the slope of the line about the same as shown on the chart? Where do YOU fit in? What are your risk factors?
Are your blood pressure readings within the normal blood pressure range?
Should you take anti-hypertension medication to lower your blood pressure?

Normal human daily Blood Pressure Range can vary widely, so any single blood pressure monitor reading is not reliable. BP monitor readings must be taken at different times of day, to determine AVERAGE blood pressure over time.
What is important is your AVERAGE BP, or MAP (Mean Arterial Pressure) over time.
Or, where are those numbers sitting MOST of the time?
Normal MAP is about 93 mm of mercury.

Lowering High Blood Pressure Tactics
Download a 1-page printable .PDF file of the Blood Pressure Chart above.

Top of page




Blood Pressure Range Chart Notes


NORMAL BLOOD PRESSURE
READINGS RANGE
HIGH Blood Pressure Symptoms -
Stressed, Sedentary, Bloated, Weak, Failing

Systolic - Diastolic
210 - 120 - Stage 4 High Blood Pressure
180 - 110 - Stage 3 High Blood Pressure
160 - 100 - Stage 2 High Blood Pressure
140 - 90 - Stage 1 High Blood Pressure
140 - 90 - BORDERLINE HIGH
130 - 85 - High Normal
120 - 80 - NORMAL Blood Pressure
110 - 75 - Low Normal
90 - 60 - BORDERLINE LOW
60 - 40 - TOO LOW Blood Pressure
50 - 33 - DANGER Blood Pressure

LOW Blood Pressure Symptoms -
Weak, Tired, Dizzy, Fainting, காம

நன்றி : நண்பர் சதீஷ் சுந்தர்

Wednesday, October 21, 2009

வலிமையுள்ளவன் செய்வதே நியாயம்!

வலிமை இல்லாதவன் செய்தால் அது குற்றம் , பயங்கரவாதம் அது தண்டனைக்கு உரியது . இதுவே வலிமை உள்ளவன் செய்தால் அது குற்றமோ , பயங்கரவாதமோ ஆகாது. அதனால தண்டனையும் கிடையாது.

( ஏற்று கொண்டால் நீங்கள் படிக்க தேவை இல்லை படித்து உங்கள் நேரத்தை வீண் அடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஏற்க மனம் மறுத்தால் , மேற்கொண்டு நீங்கள் படிக்கலாம். பிறகு முடிவு உங்கள் கையில் )

நம்ம
வூரு கட்டபஞ்சயதுல இருந்து எடுத்துகோங்க வலிமையுள்ளவன் சொல்லறதே தீர்ப்புகிரத விட நியாயமும் அது தான். வலிமையுள்ளவன் னா 1) பணம் உள்ளவர் 2) (சட்டம் ஒழுங்கை காப்பத்துற) பதவியுல்லவர் 3) பெரிய
அரசியல்வாதி . இதுல யார் பெரிய ஆலோ அவர் சொல்றது தான் உண்மை , நியாயம். ( நான் எல்லோரையும் குறை குறைவில்லை)

இது ஒன்னும் புதுசு இல்ல ஆனா உலக முழுவதும் அப்படி தான் னு சொன்ன ஆச்சர்யமா இருக்க? ஆனா அது தான் உண்மை.

நிகழ்வு 1 : தமிழர்களை நிர்வாணமா கைகளை கட்டி , துப்பாக்கில சுடுறான், கண் முன்னாடி உயிர் பிரிகிறது, இன்னும் ஆக்கபூர்வமா ஒன்னும் நடக்கல. அது உண்மையா? பொய்யா ? கேட்டுட்டு இருக்காங்க. சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு சி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ? பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என கூட்டாக சேர்ந்துருக்க மாட்டார்களா ?. இந்தா மாதிரி நிகழ்வு சதாம் உசேன் செய்ததாக டகங்களில் வந்த போது உலகமே அதிர்த்து . எவ்வளவு விரைவாக செயல் பட்டு தண்டனை வழங்கினார்கள். இன்று அதே கொடுரத்தை ஒரு நாடு செய்கிறது. இன்னும் உலகமே அமைதி மட்டுமே காக்கிறது. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? அவர்கள் பின்னாடி சீனா போன்ற வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.

நிகழ்வு 2 : ஒரு நாடு தன்னுடைய மக்களை ராசாயுன ( பாஸ்பரஸ் ) குண்டு போட்டு தீயுனால் கருக வைக்கிறது. இன்றுவரை இலங்கையை தவிர எந்த ஒரு பயங்கர வாத இயக்கமும் இதை செய்யாவில்லை . இதை கேக்கும் போது யாரும் உணர முடியாது . ஒரு சிறு எடுத்து கட்டு திபாவளி வெடிகள் பஸ்பரஸல் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். தெரியாமல் கையில் காயம் பட்டுவிட்டால் இரண்டு நாட்கள் அந்த எரிச்சல் தாங்க முடியாது . அவ்வளோ மோசமான குண்டுகளை மனிதர்கள் மீது விசுறாங்க . ஒரு நாடு செய்யும் வேலையா , ஒரு இராணுவம் செய்யும் வேலையா இது ?. இன்னிக்கி வரை யாரும் கண்டுகவே இல்லை . சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு சி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ?. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? என்னா ? அவர்கள் பின்னாடி வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.


நிகழ்வு 3 : பெண்களை நிர்வாண படுத்தி பல இடங்களில் காயம் செய்து , கடித்து கொன்று இழுத்து செல்கிறது. பல பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து கொல்கிறது. இந்த கேவலமான செயலை இன்று வரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் நமக்கு தெரிந்து செய்தது இல்லை . ஒரு நாடு செய்யும் வேலையா , ஒரு இராணுவம் செய்யும் வேலையா இது ?. குறி பாத்து சுட்டு , தோல் பட்டை முழுக்க பதக்கங்கள் வாங்கினா மட்டும் வீரனா ஆயுற முடியுமா என்ன ?. அதையும் தாண்டி மனித நேயம் காப்பவனே உண்மையான வீரன். இதை உணர அறிவு வேண்டும் அதுவும் ஆறாம் அறிவு வேண்டும் அது இல்லாதவர்களுக்கு இது சிரிப்பா தான் வரும். இன்னிக்கி வரை யாரும் கண்டுகவே இல்லை . சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு சி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ?. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? என்னா ? அவர்கள் பின்னாடி வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.

சமிபத்தில் ஒரு நிழல் படம் பார்த்தேன். அமெரிக்க வீரர் ஒருவர் போர் களத்தில் ஒரு கையில் துப்பாக்கி , மறு கையில் ஈராக்கிய குழந்தையை பாதுகாப்பாக தூக்கி முத்தம் இட்டு இறுக்கி அணைக்கிறார் . உடம்பு சிலிர்த்தது . இவன் அல்லவா வீரன். அந்த குழந்தை யார் என நினைக்க வில்லை . யாரை எதிர்த்து போர் புரிகிரானோ அவன் குழந்தையாக கூட இருக்கலாம் . அவனுள் மனிதநேயம் ஓங்கி நிற்கிறது. அவன் அல்லவா வீரன் . அந்த வீரனுக்கு தலை வணக்கம். கூ ட்டு பயிற்சியில் இதை யாரும் சொல்லிதர மாட்டர்கள் . நீ மனிதனாக இருந்தால் மட்டுமே வரும் .


நிகழ்வு 4 : போர் காலத்தில் எத்தனை குழந்தைகள் இறந்தன. குடல் சரிந்து, முகம் சிதைந்து , கை, கால்களை இழந்து. மனித உரிமை ஆணையாம் , யுனிசய்ப் , நா , செஞ்சிலுவை எல்லாம் நிராயுதமாய் , அறிக்கையால் வலி யுறுத்தி கொண்டு மட்டும் இருந்தது. இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால் , உலகம் சும்மா விட்டிருக்குமா ?. உடனே நடவடிக்கை எடுத்துருக்கும் அல்லவா ?. உலகம் அமைதி காப்பது ஏன் ?. ஒரு நாடு செய்கிறது. ஒரு நாட்டின் இரானுவம் செய்கிறது . வலிமையுள்ள நாடுகள் உதவி செய்கிறது. இதனாலா ?

நிகழ்வு 5: மக்களை ஆடு மாடு போல் பட்டிகளில் அடைத்து , ரொட்டி துண்டுகளை வீசி, உணவை மட்டுமே சிந்திக்கும் மிருகங்களை போல் , மாத கணக்கில் அடைத்து , அதற்க்கு யாரும் நம்ம முடியாத பல கதைகள் கூற, உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. உலகம் அமைதி காப்பது ஏன் ?. வலிமையுள்ள நாடுகள் பின்னால் இருப்பதாலா ? .

சுமார் 60 வருடங்களாக சம உரிமைகள் இல்லாமல் வாழும் மக்களுக்கு உலக நாடுகள் உரிமை வங்கி தர முடியவில்லை. கேட்டல் அது இலங்கை நாட்டின் இறையாண்மை சார் ந்தாம் , அப்புறம் அது உள் நாட்டு விசயமாம். அப்புறம் எதுக்கயா உள்நாடுல நடக்குற விசயத்துக்கு எல்ல நாடும் உதவி செய்யுது ?. ஆயுதம் வழங்குரவங்க உரிமையும் வாங்கி தரனும் இல்லாட்டி அமைதியா உள்நாடுல நடக்குற விஷத்தை தலையிடாம இருக்கணும். உலகம் அமைதி காப்பது ஏன் ?. வலிமையுள்ள நாடுகள் பின்னால் இருப்பதாலா ? .

இதன் மூலம் நமக்கு தெரிவது என்ன வென்றால்

வலிமை இல்லாதவன் செய்தால் அது குற்றம் , பயங்கரவாதம் அது தண்டனைக்கு உரியது . இதுவே வலிமை உள்ளவன் செய்தால் அது குற்றமோ , பயங்கரவாதமோ ஆகாது. அதனால தண்டனையும் கிடையாது.

என்ன ஆச்சர்யம் என்றால் ஒரு ஊர் அல்ல , ஒரு நாட்டில் அல்ல, உலகமே இது தான் எனபது கசப்பான உண்மை .

நியாயம் , தர்மம், நீதி என்றெல்லாம் யோசிப்பதை விட்டுவிட்டு நான் யோசிப்பது எல்லாம் பல வருடங்களுக்கு முன்னால் படித்த "டார்வின் கோட்பாடுகளை மட்டுமே". அது மட்டுமே என்றும் உண்மையாகிறது .

உண்மை கசக்கிறது ...


Monday, October 19, 2009

ஈழ சகோதரர்களே சிந்தியுங்கள்

தற்போது தமிழ்நாட்டு தலைவர்கள் இலங்கை பயணம் பற்றி நெறைய விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து சிந்தியுங்கள் ஈழ சகோதரர்களே . திருமாவையோ , தமிழ்நாட்டு தலைவர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை. போரை நிறுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய் விட்டது . உண்மையில் எல்லோரும் போராட வில்லை என்பது அவர்களளுடைய நிர்பந்தம். இதை நான் நியாய படுத்த வில்லை . அரசியல் , பதவி, கூட்டனி, ஊடகங்களின் நிலை , சூழ்ச்சி, தந்திரம் , பழிவாங்கும் எண்ணம் , அண்டை நாடுகளின் சூழ்ச்சி என்று பல காரணங்கள் இருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் . ஆனால் தமிழர்காக )போரடிய தமிழர்கள் பலர் உண்டு என்பதுவும் உண்மை. இறுதியில் ராஜபக்ஷேவின் தந்திரம் தான் ஜெயுத்தது. ஒரு இன அழிப்பை பயங்கரவாதம் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து தன் நோக்கமான "வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களின் எண்ணிக்கையை குறை " என்ற என்னத்தை நிறைவேற்றி கொண்டது தான். இன்றைய ஈழ தமிழர் நிலைமை இன்னும் ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை , வரலாறு. பல சூழ்ச்சியின் தொகுப்பே இது.

இன்றையா நிலைமையில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியாது அடுத்து என்ன எனபது தான்?. மக்கள் தங்கள் இடங்களுக்கு இடம் பெயர் வேண்டும். அது ராஜபக்சே நினைத்தால் மட்டுமே முடியும் . ஐ நா (உண்மையில்) நினைத்தால் கூட முடியாது. கன்னி வெடி ... அது இது என்று திசை திருப்பும் வேளையில் தான் ஈடுபடுவது ராஜபக்சே வின் உண்மையான எண்ணம் . மக்கள் தங்கள் இடத்துக்கு இடம் பெயன்றால், அடுத்து தமிழர்கள் உரிமைகள் பற்றி எல்லோரும் கேள்வி ஏலுபபுவார்கள் . இதை தவிர்க்க , விஷத்தை ஆற போட்டு திசை திருப்பவே காரணங்களை சொல்லி வரும் நிலையில், தொங்க வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை. இன்றைய நிர்பந்தம் இது. திருமா நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசின் கட்டுபாட்டில் , மாநில அரசு. மாநில அரசின் கட்டுபாட்டில் கூட்டனி கட்சியில் ஒரு கட்சி யின் தலைவர். அவர் அங்கு வாய் திறந்து தண்ணி , உணவு மட்டுமே குடிக்கவோ, உண்ணவோ செய்ய முடியும். திருமா அரசியல் சூழ்ச்சியின் சிக்கி கொண்டது தான் உண்மை. இது நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவர் அங்கு சென்றிருக்க மாட்டார் . அங்கு போகாமல் தவிர்த்திருக்கலாம். ஒரு ஈன பயலுக்கு கையெடுத்து கும்பிடும் நிலை. அவன் சொல்வதற்கெல்லாம் சிரிக்க வேண்டிய நிலை. ( கொஞ்சம் சிந்தியுங்கள் அங்கே யார் இருந்தாலும் இதை தான் செய்திருக்க முடியும் ).

எனவே தமிழர்கள் யாரையும் பகைத்து கொள்ளாமல், என்ன உதவி பெற முடியும் என்பதை மட்டுமே எண்ணுவது சிறந்தது. அரசியால் எனபது சுயநலம் கலந்த ஒன்று . அரசியால் வாதிகள் எல்லாவற்றையும் அளப்பது ஓட்டால். நின்றால் எத்தனை ஒட்டு விழும், உக்கார்தால் எத்தனை ஒட்டு விழும் , மருத்துவமனையில் படுத்தால் எத்தனை ஒட்டு விழும் என்பதை மட்டுமே வாழ்வில் சிந்திப்பார்கள். இது ஜுலியஸ் ஸீஸர் காலம் முதல் தெரிந்த உண்மை. எனவே தமிழர்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் அதை வெளிபடையாக விமர்சிக்காமல் , அவர்களை திட்டாமல் அவர்களால் என்ன உதவி பெற முடியும் , உங்கள் முன்நேற்றதுக்கு எவ்வாறு பயன் படுத்த முடியும் என்பதை மட்டுமே சிந்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

காலம் பதில் சொல்லும் ... தேவை நம்பிக்கை
தமிழ் நாட்டில் இருந்து ஒரு குரல் ...

Monday, October 12, 2009

வேலைக்கும் பொது அறிவிற்கும் மேலே

During work, Raman and Narayan were chatting:

Raman: Narain, I've been attending night classes for 5 months now and I have an exam next week.
Narayan: oh!
Raman: For example, do you know who is Graham Bell?
Narayan: No
Raman: He's the inventor of the phone in 1876; if you take night courses you would know this.
The next day, the same discussion took place:
Raman: Do you know who Alexander Dumas is?
Narayan: No
Raman: He's the author of "The 3 Musketeers", if you take night courses, you would know this.
The next day, once again:
Raman: And do you know who Jean Jacques Rousseau is?
Narayan: No
Raman: He's the author of "Confessions" , if you take night courses, you would know this.

This time, Narayan got irritated and said: And you, do you know who is Balakrishnan Kuppuswamy?
Raman: No

Narayan: He's the guy roaming with your wife!! If you stop night courses, you would know .

"Moral: There are more important things in life than Work and General Knowledge."

நன்றி : டேவிட் ஜோசேப் (மின்னஞ்சல்)

Sunday, October 11, 2009

இந்தியாவில் வேலை நடப்பது ஏ (இ) ப்படி ?

Three contractors are bidding to fix a broken fence at the White House. One from Bangladesh, another from India and the third, from China.

They go with a White House official to examine the fence.

The Bangladesh contractor takes out a tape measure and does some measuring, then works some figures with a pencil.


"Well", he says, "I figure the job will run அபோut $900. ($400 for materials, $400 for my team and $100 profit for me)".

The Chinese contractor also does some measuring and figuring, then says,
"I can do this job for $700. ($300 for materials, $300 for my team and $100 profit for me)".

The Indian contractor doesn't measure or figure, but leans over to the White House official and whispers, "$2,700."

The official, incredulous, says, "You didn't even measure like the other guys! How did you come up with such a high figure?"
The Indian contractor whispers back, "$1000 for me, $1000 for you, and we hire the guy from China to fix the fence."

"Done!" Replies the official.


சிரிப்பா வருதா ...

100 % சதவிதம் உண்மைக ... இந்தியாவுல இப்படிதான் பொழப்பு ஓடுது ..

புது (கடி) கவிதைகள்







சோர்ஸ் : திரு மனோகரன் , மின்னஞ்சல்

Friday, October 9, 2009

இது தானாய்யா உலகம்

பழைய கதை
There was once a washer man who had a donkey and a dog. One night whenthe whole world was sleeping, a thief broke into the house, the washerman was fast asleep too but the donkey and the dog were awake. The dogdecided not to bark since the master did not take good care of him and he (the dog) wanted to teach him (master) a lesson.The donkey got worried and said to the dog that if he doesn't bark,the donkey will have to do something himself. The dog did not changehis mind and the donkey started braying loudly.Hearing the donkey bray, the thief ran away, the master woke up andstarted beating the donkey for braying in the middle of the night போர் no reason.
Moral of the story
" One must not engage in duties other than his own"
புது கதை
Now take a new look at the same story...The washer man was a well educated man from a premier managementinstitute. He had the fundas of looking at the bigger picture andthinking out of the box. He was convinced that there must be somereason for the donkey to bray in the night.. He walked outside alittle and did some fact finding, applied a bottom up approach,figured out from the ground realities that there was a thief who brokein and the donkey only wanted to alert him about it. Looking at thedonkey's extra initiative and going beyond the call of the duty, herewarded him with lot of hay and other perks and made him his favoritepet.The dog's life didn't change much, except that now the donkey was moremotivated in doing the dog's duties as well. In the annual appraisalthe dog managed "ME" (Met Expectations) .Soon the dog realized that the donkey is taking care of his duties andhe can enjoy his life sleeping and lazing around.The donkey was rated as " star performer". The donkey had to live upto his already high performance standards.Soon he was over burdened with work and being always under pressurecould not perform to the high expectations. He was fired.
Now is looking for a NEW JOB ...

Thursday, October 8, 2009

STROKE


Please have a look....This 5 min may save a life and lots of tears..... You could save a life.


STROKE: Remember The 1st Three Letters...


S.T.R .. My friend sent this to me and encouraged me to post it and spread the word. I agree. If everyone can remember something this simple, we could save some folks.


STROKE IDENTIFICATION: During a party, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine and just tripped over a brick because of her new shoes. (they offered to call ambulance) They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingri passed away.) She had suffered a stroke at the party . Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today.
Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this...


STROKE IDENTIFICATION:


A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough. RECOGNIZING A STROKE Remember the '3' steps, STR . Read and Learn! Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions :


S * Ask the individual to SMILE ....

T * = TALK. Ask the person to SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (eg 'It is sunny ou today').

R * Ask him or her to RAISE BOTH ARMS .


If he or she has trouble with ANY ONE of these tasks, call the ambulance and describe the symptoms to the dispatcher.

NOTE : Another 'sign' of a stroke is

1. Ask the person to 'stick' out their tongue.

2. If the tongue is 'crooked', if it goes to one side or the other that is also an indication of a stroke.


A prominent cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people; you can bet that at least one life will be saved.
and it could be your own..
PASS THIS ONE.


Saturday, September 12, 2009

காதலி & மனைவி

Lovely lines matches most of us...

"
He loved her
But married another ..
One became the wife
The other became the password
"

நன்றி : சிவபிரபு
(மின்னஞ்சல் மூலம் )

Friday, September 11, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?”


நியாயமான ஒரு கேள்வி


ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?” –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்.”

“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.
“இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.

“சரி”
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants….”.
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.
“இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”?

“MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.”

“முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?” –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

“சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்”

“500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?”

“இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு “ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு” புலம்ப ஆரம்பிப்பான்.

“அப்புறம்?” – அப்பா ஆர்வமானார்.

“இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
“இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்”னு சொல்லுவோம்.
“CR-னா?”

“Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்”னு
சொல்லுவோம்.

இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.”
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

“இதுக்கு அவன் ஒத்துபானா?”

“ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?”

“சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?”

“முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.”

“அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.”

“அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.”

“அப்போ இவருக்கு என்னதான் வேலை?” –

அப்பா குழம்பினார்.

“நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை.”

“பாவம்பா”

“ஆனா இவரு ரொம்ப நல்லவரு.

எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.” “எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?”

“ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.

நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.”
“நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!”

“இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.”

“இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?”

“வேலை செஞ்சா தானே?

நான் கடைசியா சொன்னேன் பாருங்க…

டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே “இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு”
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.”

“அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?”

“இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.
புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.”
“ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?

புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?”

“அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க”
“கிளையன்ட் சும்மாவா விடுவான்?
ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?”

“கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.”
“எப்படி?”

“நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.”
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்”.

“சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?”

“அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்.”

“அப்புறம்?”

“ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.”

“அப்புறம்?”

“அவனே பயந்து போய்,
“எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு”
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.”
இதுக்கு பேரு “Maintenance and Support”.
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

“ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு” இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

“எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.”

நன்றி :-
( நண்பர் அருண்குமார் மின்னஞ்சல் வழி தகவல் )

Monday, August 31, 2009

சுவின் ப்ளு வுக்கு இடையே கல்யாணம்

புனாவில் ஒரு கல்யாணம்


ஸ்வைன் ப்ளு உங்களை அன்போடு வரவேற்கிறது










Thursday, August 27, 2009

தன்னம்பிக்கை கதை

( இது நண்பர் David மின்னஞ்சல் மூலம் அனுப்பியது )

எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

Tuesday, August 25, 2009

மன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்

( இது நண்பர் சதீஷ் சுந்தரின் மின்னஞ்சல் மூலம் கிடைத்த பயனுள்ள தகவல் )

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்கவனியுங்கள்...
ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.


2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.
3. நடங்கள்! ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.
4. ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள்... கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.
5. சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.
6. மனம்விட்டுப் பேசுங்கள்.
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.
7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.
8. தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.
9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.
10. மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும்... ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள். இவற்றை மட்டும் தினமும் கடைப்பிடியுங்கள்...
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் புதிய திருப்பத்தைக் காணுங்கள்.
நாம் ஓயும் முன்னே சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது............

Monday, August 24, 2009

Health Benefits of Water

Health Benefits of Water
Our bodies are made up of mostly water. Just look at the facts: The brain contains 74% water, blood contains 83% water, lean muscle has 75% and bone has 22% water. Experts agree that water is one of the most powerful forms of treatment. So how come most people don't drink enough water?

10 Health Benefits of Water:


1. Water prevents kidney stones. The most common cause of kidney stones is not drinking enough water. Since water dissolves the substances that form stones in the urine, drinking 12 glasses daily helps treat kidney stones.

2. Water treats urinary tract infection. The more water you drink, the more you will urinate. "Drinking lots of water will help flush out harmful bacteria from your bladder," says Medical City kidney specialist Dr. Roberto Tanchanco.

3. Water helps patients with diarrhea by preventing dehydration. As a first-aid for diarrhea, you can make your own oral rehydration solution at home. Mix a glass of water with 2 teaspoons sugar and ¼ teaspoon salt, and drink as much as you can tolerate. This is similar to the dextrose solution in the hospital.

4. Water helps reduce fever. For symptoms of flu, water can help lower your body temperature when you urinate the "heat" out of your body. If you're sick, drink more water for you to recover faster.

5. Water helps treat cough and colds, sore throat, and respiratory infections. Water helps loosen sticky phlegm. A respected lung specialist told me that some mucolytics out there are just as beneficial as drinking lots of water.

6. Water reduces heartburn. Taking 2-3 gulps of water every 20 minutes or so can help flush the stomach acid away. Bananas and water are effective alternatives to taking antacids. Try it.

7. Water prevents constipation and its complications. Too little water can harden the stools and lead to hemorrhoids and diverticulosis, a disease of the large bowel. Drink water and eat lots of vegetables to soften your stools.

8. Water keeps you alert and energetic. If you're dehydrated, your blood is literally thicker. This makes it harder for the blood to circulate. As a result, the brain can become less active and you can feel confused and fatigued. Some studies also show that water may help cure migraine headaches.

9. Water helps reduce weight. By drinking a glass or two of water before a meal, you will lessen the amount of food you can take in order to feel full. Water has zero calories and will not make you fat.

10. Water keeps your skin soft and radiant. Just as a dehydrated person will have deep-set eyes and wrinkled skin, so will a fully hydrated person exhibit a normal and beautiful skin tone.

The Correct Way To Drink Water:


1. Drink water when you wake up. Your body loses water while you sleep, so drink a glass before you go to sleep and another glass when you wake up. You are naturally thirsty or dehydrated in the morning. Drinking water in the morning helps flush out the toxins that have accumulated all night.

2. Drink 8 to 12 glasses a day. According to the Mayo Clinic, a 120-pound individual needs 8 cups of water a day, while a 190-pound person would require 12 cups daily. Dr. Robert Tanchanco says that we should monitor our urine color and keep it on the light side. However, drink only a maximum of 16 glasses a day, and not more.

3. Drink little by little throughout the day. It is preferable to sip water throughout the day rather than to drink two glasses all at once. This will lessen the stress on the heart (especially if you have heart disease) and give your body more time to absorb it.

4. Don't wait until you're thirsty to drink water. By the time you feel thirsty, you're probably already 2 glasses below your normal water needs. Elderly people are also less sensitive to the body's need for water.

5. Drink water, not soft drinks, alcohol or coffee. Some experts believe that tea, sodas and coffee can be potentially dehydrating. Moreover, the high phosphorus and sugar content in cola drinks can lead to conditions like osteoporosis and diabetes. One study shows that adults who drank six cups of coffee daily experienced mild dehydration. Drinking alcohol is much worse because it actually dehydrates you by making you urinate a lot.

6. Train children to drink water. Set a good example to your kids and drink water together. Make sure that children drink enough water when they're active. Pack a large bottled water in their lunch box.

7. Drink more when it's hot. People living in hot climates like the Philippines need to drink more water. They are more prone to develop kidney stones compared to those living in cooler regions.

8. Drink more as you exercise. When you exercise, you need to drink more water to compensate for fluid loss. Go for an extra 500 ml of water for a 30-minute to 1-hour exercise. Eating a banana also helps keep your potassium up.

9. Drink more when you're sick. Even though you don't feel like it, you really need to drink more water to help your body recover from various infections. If you're dehydrated, you'll feel much worse.

10. Drink more if you're pregnant. Women who are expecting or breast-feeding need additional fluids to stay hydrated. The Institute of Medicine recommends that pregnant women drink 10 cups of fluids daily and women who breast-feed take in about 13 cups of fluids a day.

Monday, June 8, 2009

இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து

இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து
சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத் தாருங்கள்
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!
வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிடும் சிறுவர்க்குக்
கைகொடுக்க வாருங்கள்!
தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!
வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!
அடுக்கி வைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
அவலக்குரல் போக்குங்கள்!
எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல..
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக் குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மைமீதுதான்!
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியாதா?
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனை மரத்தில்
என்றேனும் கூடுகட்டும்!

Friday, June 5, 2009

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?
மனித உரிமை ஆர்வலர் முனைவர் வி. சுரேஷ்
ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, அந்நாடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது எப்படி? என்ற கேள்விக்கு விரிவாக விடையளித்துள்ளார் மக்கள் சமூக உரிமை கழகத்தின் தமிழகத் தலைவர் முனைவர் வி. சுரேஷ். உணவு பாதுகாப்பிற்கான உச்ச நீதிமன்றத்தின் ஆணையருக்கு ஆலோசகராகவும், மத்திய சட்டம், கொள்கை மற்றும் மனித உரிமை ஆய்வு அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளார். அவரோடு தமிழ்.வெப்துனியாவின் நேர்காணல்.தமிழ.வெப்துனியா.காம்: இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், நடந்து முடிந்த இறுதிப் போர் என்று சொல்லப்பட்ட மோதிலில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று ஐநாவின் மனித உரிமை மன்றத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை ஐ.நா. மன்றத்திலேயே கூறினார். அவர் கூறியதன் அடிப்படையில் ஆழமான விவாதம் நடந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மற்றும் போர் மீறல்கள் என்ன என்பது பற்றி தெளிவாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 26, 27ஆம் தேதிகளில் நடந்த அந்த கூட்டத்தில் அப்படி எதுவும் விவாதிக்கப்படாதது மட்டுமின்றி, சிறிலங்க அரசே கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எப்படி, எதனால் என்ற கேள்வியும், ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்ற சந்தேகமும் பொதுவாக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் உள்ளது. இதனை நீங்கள் விரிவாக விளக்க வேண்டும்.முனைவர் வி. சுரேஷ்: 26, 27ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில், உச்சக்கட்ட அரசியல் அதாவது ஆங்கிலத்தில் ஹைலெவல் பாலிடிக்ஸ் என்று சொல்வார்களே அதுதான் நடந்துள்ளது.
webdunia photo
FILEபல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால் அந்த இறப்பே கண்துடைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு சில உண்மைகள் வெளிவருகின்றன. எப்படி ஒரு அரசாங்கம், தங்களுக்கு எதிரான தீவிரவாதத்தின் மீது போரை முன்னெடுத்துச் செல்கிறார்கள், அங்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளை போர் என்ற கண்ணோட்டத்திலும், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மறைப்பது எப்படி என்பதையும் செய்து காட்டினர்.வெறும் ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தாமல், போரில் சம்பந்தப்படாதவர்களையும் (அப்பாவி மக்களையும்) எப்படி ஒரு போர் வடிவத்தில் அவர்களையும் போருக்குள் கொண்டு வந்தார்கள், எவ்விதமான தந்திரத்தைக் கையாண்டார்கள் எனபதை இலங்கையில் நடந்த போரின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.இலங்கையில் தற்போது இருக்கக் கூடிய அரசாங்கம் மிகக் கொடூரமானது. நம்மை எல்லோரையும் விழுங்கிவிட்டார்கள். ஆள் பலம், படை பலம் இருக்கிறது. பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு சுலுகைகளையும் பெற்றார்கள். மனித உரிமை அமைப்பாளர்களை வெளியேற்றுதல் போன்றவற்றை ஒவ்வொன்றாகச் செய்தார்கள். ஜெனிவாவில் நடந்த விஷயங்களை இந்த பின்னணியில்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கம், தன்னைப் பற்றியே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானத்தை சாதாரணமாக யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்வதை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால், அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, தான் மட்டுமல்லாமல், 25 நாடுகள் இதனை முன்மொழிந்து தீர்மானத்திற்கு ஆதரவு பெற்றுள்ளனர் என்றால், யார் யாரை முட்டாளாக்கிவிட்டார்கள் என்று புரியவில்லை.அங்கு நடந்த மாபெரும் மனிதப் பேரழிவைப் பற்றி கூறியது உண்மையா அல்லது அங்கு ஒன்றுமே நடக்கவில்லை, ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை, மிக அழகாக போரை நடத்தினோம் என்று கூறுவது உண்மையா என்று புரியவில்லை.சில நேரத்தில் நமக்கே குழப்பமாகிவிடுகிறது. அந்த அளவிற்கு தந்திரமாகவும், சிறப்பாகவும் ஒரு செயலை அவர்கள் செய்து முடித்துள்ளனர்.இதைத்தான் நாம் அவசியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சிறிலங்க அரசு மேற்கொண்டது போன்ற ஒரு போர் நடவடிக்கையை, ஆசியாவில் இருக்கும் நாடுகளும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் இதே வழியில் பின்பற்றினால் ஒரு பயங்கரமான நிலை ஏற்படும்.இது போன்றதொரு நிலைமை பாகிஸ்தானிலும் நிலவுகிறது. பாகிஸ்தானில் பலுச்சி மக்கள் வாழும் பகுதியில், நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல பலுச்சி மக்கள், நாங்கள் தனியே போக வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எப்படி இலங்கையில் தமிழர்கள் கூறி வருகின்றனரோ அதைப்போன்ற பிரச்சினைதான் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் நிலவுகிறது. கிழக்கு நேபாளத்திற்கும், மேற்கு நேபாளத்திலும் இதே நிலை நிலவுகிறது. பங்களாதேஷில் சிட்டகாங் பிரச்சினை உள்ளது. அங்கு ரிகாங் பழங்குடியினரும் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர்.நமது இந்தியாவிலும் வடக்கு பகுதியில் இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. மணிப்பூர், நாகாலாந்து, அசாம் என பல இடங்களில் இப்பிரச்சினை உள்ளது.இதுபோன்ற பிரச்சினைகளுக்கு, இலங்கையில் நடந்தது போன்ற (போர்) மாதிரியான தீர்வை நோக்கி சென்றால் என்னவாகும் என்பதுதான் அடுத்த கவலைக்குரிய விஷயமாகும்.இலங்கையில் 3 முறைகளைக் கையாண்டார்கள். ஒன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று 9/11க்கு பிறகு உருவாகிய ஒரு சூழ்நிலையை இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். விடுதலைப் புலிகள் என்பவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் தமிழர்கள் என்பதால், எல்லா தமிழர்களுமே தீவிரவாதிகள்தான். அவர்களை நம்ப முடியாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறி 2006ஆம் ஆண்டே தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையை வைத்துக் கொண்டு அவர்கள் கையாண்ட சில அரசியல் போக்குகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.போருக்குப் பின்னால் நடந்த அரசியல் தந்திரங்களை மூன்று நடவடிக்கைகளாகப் பிரிக்கலாம். ஆகஸ்ட், 2006ஆம் ஆண்டுதான் இலங்கை போர் 4 என்று ஆரம்பித்தனர். இது டிசம்பர் 2008 வரையான காலகட்டம். அடுத்து, ஜனவரி 2009 முதல் ஏப்ரல் 2009 வரையான காலகட்டம். அது போரின் உச்சக்கட்டம். கடைசி பாகம் ஏப்ரல் 14, 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை. அப்போதுதான் பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். போர் முடிந்தது என்று அவர்கள் அறிவித்தார்கள். இன்று மூன்று காலக்கட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியது அவசியம். இந்த மூன்று காலகட்டத்தையும் பிரித்து அந்த காலக்கட்டத்தில் என்ன நடந்தது, அப்போது இலங்கை அரசின் வழிமுறைகள் என்ன என்று பார்க்கவில்லை என்றால், வரலாற்று ரீதியாக நாம் தவறு இழைத்துவிட்டதாக ஆகிவிடும்.அது புரியாமலே நாம் ஒரு நிலையை எடுத்துவிட்டால், என்ன நடந்தது என்று தெரியாமல் போய்விடும் என்பதோடு, இதனை எதிர்ப்பதாக இருந்தால் எப்படி எதிர்ப்பது என்பதும் தெரியாமல் போய்விடும்.ஆகஸ்ட் 2006 முதல் டிசம்பர் 2008 வரையிலான காலகட்டத்தைப் பார்ப்போம். அப்போதுதான் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் துவக்கினார்கள். சிறிது சிறிதாக போரை துவக்கி பெரிய அளவில் கொண்டு வந்தனர்.இலங்கை முழுவதுமே ஒரு அவசர நிலை பிரகடனப்படுத்தியது போன்ற நிலையை கொண்டு வந்தனர். எங்கு பார்த்தாலும் காவலர்கள், ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். தமிழர்கள் சித்ரவதை, ஆள் கடத்தல், காணாமல் போவது, வெள்ளை வாகன ஆள் கடத்தல் போன்றவை நிகழ்ந்தது. அப்போது ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் தெளிவாக செய்தனர்.முன்பு செய்த தவறுகளை மாற்றிக் கொண்டனர். உதவி செய்யும் அமைப்புகளான, ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, ஜப்பான் போன்ற நிதி உதவி அளிக்கும் அமைப்புகளுக்கு, ஜனநாயகம் என்பது ஒரு தேவையான சொல். அந்த சொல்லுக்கான ஒரு நாடகத்தை வெளியில் இருந்து செய்துவிட்டனர். அவர்களுக்கு ஜனநாயகம் என்பது பேரளவில் இருந்தால் போதும், நாட்டிற்குள் அப்படி ஒரு நிலை நிலவுகிறதா என்பதை எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இலங்கை அரசும், இவர்களுக்கு ஒரு நாடகத்தை நடத்திக் காட்டிவிட்டது. இவர்களிடம் நிதியைப் பெற அதுவே போதும் என்று எண்ணியது.அதனால் ஜனநாயகத்தை அப்படியே பாதுகாத்தார்கள். தேர்தல், சட்டம், காவல்துறை போன்றவற்றை அப்படியே வைத்துக் கொண்டு, உள்ளே மட்டும் ராணுவ ஆட்சியைப் போன்று நடத்தி வந்தனர்.காவலர்கள் யாரை வேண்டுமானாலும் பிடித்துச் செல்லாம், அடிக்கலாம், கொலையும் செய்யலாம். ஜனநாயகத்தின் அடிப்படையே சட்டத்தின் ஆட்சி என்பதாகும். அதில், நீதிமன்றம், காவல்துறை, நாடாளுமன்றம், அரசு அமைப்பு என எல்லாமே தனித்தனியாக இருக்க வேண்டும். இவை எல்லாமே சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். மூன்றாவது யாருமே சட்டத்திற்கு மேல் கிடையாது. எல்லோருமே சட்டத்திற்குக் கீழ்தான் என்பது. இங்கு என்ன நடந்தது என்றால், மேலோட்டமாக ஜனநாயகம் என்று வைத்துக் கொண்டு, உள்ளிருக்கும் அமைப்புகளை ஒவ்வொன்றாக உடைத்து சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்தனர்.
அதற்கு ஒரு அத்தாட்சியாக, நம் நாட்டில் 40, 50 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யும்போது, அங்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பெட்ரோல் விலையை உயர்த்தியது தவறு என்று தீர்ப்பளித்தார். உடனடியாக அவர் மிரட்டப்பட்டார்! இதுபோன்ற தீர்ப்புகளைக் கூறிக் கொண்டிருந்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய் என்று அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் கதி என்ன வென்று சொல்லவே வேண்டாம்.இப்படித்தான் ஒவ்வொருத் துறையிலும் மிகவும் கூர்மையாக அமைப்புகளை உடைத்தெறிந்தனர். காவல்துறைக்கும், ராணுவத்திற்கும் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறப்பட்டது. இது உச்சக்கட்டத்திற்கு போனது.
webdunia photo
WDஇது பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், ஐ.நா.வில் கூறியது என்னவென்றால், ஒரு 10 போலிஸ்காரர் இருந்தால், அதில் 3 பேர் ரவுடிகள் போல செயல்படுகிறார்கள். அவர்களால்தான் மற்ற காவல்துறைக்கும் கெட்ட பெயர் வருகிறது என்று பொதுவாக கூறுவார்கள். இவர் சிறிலங்காவில் பல முகாம்களுக்கும், பல இடங்களுக்கும் சென்றுவிட்டு என்ன சொல்கிறார் என்றால், இந்த மாதிரியான சித்ரவதை செய்யும், சட்ட மீறல் செய்யும் காவலர்கள் குறைந்தபட்சமாக இல்லை. அவர்கள்தான் அதிகபட்சமாக இருக்கிறார்கள். அதாவது 10இல் 7 பேர் இருக்கிறார்கள். எனவே, ஏதோ ஒரு சில காவலர்கள் இப்படி செய்து விட்டார்கள் என்று ஒதுக்க முடியாது, ஏறக்குறைய அனைத்து பேருமே அங்கு அப்படித்தான் உள்ளனர் என்று கூறியுள்ளார். இதை நான் சொல்லவில்லை, ஐ.நா.வால் அமர்த்தப்பட்ட அதிகாரி திட்டவட்டமாகச் சொல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தெளிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.ஜனநாயகப் போர்வையில் அங்கு ஒரு ராணுவ ஆட்சி அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் அங்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களை கடத்திச் செல்வதும் கொல்வதும் மிகவும் சாதாரணமாக நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுபோன்று கொல்லப்பட்டுள்ளனர்.கொழும்புவில்தான் இது அதிகமாக நடக்கிறது. ஒரு நான்கு பேர் ஒரு இளைஞரைக் கடத்திச் சென்று கொன்று விடுவார்கள். இதனால், மற்றவர்களுக்கு, நாளைக்கு நமக்கும் இந்த நிலைதான் என்ற பயம் வரும், இதனால் சமுதாயமே ஒரு அச்சத்திற்குள்ளாகியுள்ளது.இது ஒரு அரச பயங்கரவாத நிலையாகும். அரசே ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு, மக்களை பயந்த நிலையிலேயே இருக்க வைப்பதான முறையாகும்.இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழர்களை மட்டும் இவர்கள் தாக்கவில்லை. தமிழர் அல்லாதவர்களும் இந்த தாக்குதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். சிங்களர்கள், அதாவது சிங்கள பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மறைந்து போய்விடுவார்கள். சிங்களர்கள் பலர், தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு வழி காண வேண்டும், அது வன்முறை மூலமாகவோ, ராணுவத்தின் நடவடிக்கை மூலமாகவோ முடியாது. அரசியல் தீர்வைத் தான் காண வேண்டும் என்று முன் வைத்தவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 20 பத்திரிக்கையாளர்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். மற்றவர்கள் சிங்களவர்கள். எனவே இந்த ஆட்சி தமிழர்களுக்கு மட்டும் எதிரான ஆட்சி அல்ல, ஒரு சர்வாதிகார ஆட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,1988, 1989ஆம் ஆண்டுகளில், ஜே.வி.பி. ஆட்சி நடந்த போது 40,000 பேர் ராணுவத்தினரால் நடு ரோட்டில் தூக்கிலிடப்பட்டனர். பெளத்த சமுதாயத்தைச் சேர்ந்த இலங்கை அரசு, தன்னுடைய மக்கள் 40,000 பேரையே கொன்று குவித்துள்ளதே, அது தமிழர்களைக் கொல்வதில் ஏதாவது ஆச்சரியம் உள்ளதா? வன்முறையில் ஊறிய ஒரு ஆட்சி, ராஜபக்சே மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் அப்படித்தான் இருந்துள்ளனர்.முன்பொரு காலத்தில், இலங்கையில் 5,000 பேரைக் கொன்ற வழக்கை ஐ.நா. முன்பு கொண்டு சென்றவர் ராஜபக்சே. தானே ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டி ஐ.நா.வில் வழக்குத் தொடர்ந்தவர். அப்போது, ஐ.நா.வின் பார்வை எப்படி இருக்கும், ஐ.நா.வின் நடவடிக்கை எப்படி இருக்கும், அவர்களது கண்ணோட்டம் என்ன என்பது எல்லாமே தெரியும், அதனால் இவர் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐ.நா.வை எப்படி சரிகட்டுவது என்று சரியாக கணித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்துள்ளார்.
தமிழ்.வெப்துனியா: ஐ.நா.வில் சுவிட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானத்தில், எல்டிடிஇ எனப்படும் பயங்கரவாத அமைப்பை நிர்மூலம் செய்துவிட்டீர்கள். அதற்கு பாராட்டுகள், அங்கு ஏதேனும் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்குமேயானால், ஏதாவது போர் குற்றம் நடந்திருக்குமேயானால், அதற்கு சிறிலங்க அரசு விசாரணை நடத்தி, குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஒரு சாதாரண தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனரே?சுரேஷ்: முதலில் இந்த கூட்டத்தை கூட்டியதே ஜெர்மனிதான். அதன் உரையிலும் முதலில் விடுதலைப் புலிகளை தாக்கிப் பேசிவிட்டுத்தான் தனது உரையை துவக்கியது. எல்டிடிஇ- அமைப்பினரும் சில அத்துமீறல்களை செய்துள்ளனர், அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை விடுதலைப் புலிகளின் பிரச்சினை என்று கூறுவது வரலாற்றுத் தவறு. அதாவது விடுதலைப் புலிகள் என்பது தமிழர்களின் முக்கிய அங்கம். ஆனால் அவர்களையும் மீறியதுதான் தமிழர்கள் பிரச்சினை.கடந்த 20, 30 ஆண்டு கால த‌மிழ‌ர்க‌ள் போரா‌ட்டத்தில் விடுதலைப் புலிகள் ஒரு முக்கிய அமைப்பாக இருந்துள்ளனர். தமிழர்களைப் பற்றிய தவறான பிரச்சாரத்தின் மூலம், அவர்களைப் பற்றிய எண்ணத்தை மாற்றினர். தமிழர்களா... அவர்கள் வீணாக வன்முறைக்குப் போவார்கள் என்று எண்ண வைத்தனர். அதுதான் அவர்களது முதல் வெற்றி. இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை. வெறும் மேடைப் பேச்சில் மட்டுமே தங்களது திறனைக் காட்டினர். இதனை எதிர்க்கக் கூடிய அமைப்பை நாம் உருவாக்க வில்லை. இது ஒரு கசப்பான உண்மை.தமிழகத்தில் உள்ள அமைப்புகள், இலங்கைப் பிரச்சினையை கொண்டு போன முறையில் தவறு உள்ளது என்பதை நிச்சயமாகச் சொல்லாம்.தமிழ்.வெப்துனியா: விடுதலைப் புலிகளும் சரி, இலங்கை அரசும் சரி பல விதிகளை மீறி மனித உரிமை மீறல்களை செய்துள்ளன. ஆனால், இதுபற்றி எதையும் விசாரிக்காமல், இலங்கை அரசு மனித உரிமையை நிலைநாட்டியுள்ளது, இந்த பணி மேலும் வளர வேண்டும் என்று பாராட்டி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எந்த அடிப்படையில் நியாயமானது?சுரேஷ்: முதலில் இலங்கை அரசாங்கம் இந்த பிரச்சினையை எவ்வாறு கொண்டு போயுள்ளது என்றால், இந்த நாடுகள் அனைத்தும் ஏற்கனவே வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் இருந்தவை. இழந்த இப்பகுதிகளை மீண்டும் பிடிக்க வெள்ளைக்காரர்கள் செய்யும் சதி தான் இந்த நடவடிக்கை என்பது போல, இலங்கைப் பிரச்சினையை முன் கொண்டு வந்தனர். இதனால், லத்தீன் அமெரிக்க நாடுகள், கியூபா, வெனிசுலா, பொலிவியா போன்ற நாடுகள், கொஞ்சம் கூட யோசிக்காமல், இலங்கை அரசு சொன்னதை நம்பினார்கள்!மேலும், இலங்கை அரசு உலக பத்திரிக்கையாளர்களை தன் வசம் கொண்டு வந்துவிட்டது. இதனைத்தான் தமிழ் அமைப்புகள் தடுக்கத் தவறிவிட்டன. உலக பத்திக்கை அமைப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.இதனால், இலங்கை அரசு சொல்வதுதான் அவர்களுக்கு முக்கியம். இலங்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவில்லை. “விடுதலைப் புலிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாத குழுவை அடக்குவது முக்கியமானது. இது வளரும் நாட்டின் முக்கியக் கடமை. வளரும் நாட்டிற்கு எப்போதும் வளர்ந்த நாடுகள் தடைகளைக் கொடுப்பார்கள். வளரும் நாடுகள் எதைச் செய்தாலும், அதற்கு வளர்ந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆகையால் இந்த சூழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நமது கடமை” என்று கூறி கியூபா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன.இதுபோன்ற சிறிய நாடுகள் ஆதரவு தெரிவித்ததை விட, சீனா, பாகிஸ்தான் போன்ற பெரிய நாடுகளும் அதனை ஆதரித்தது முக்கியக் காரணம். இந்தியாவின் ஆதரவும் ஒன்று. இந்தியா சொன்னா சரியாக இருக்கும் என்று மற்ற நாடுகளும் நம்பின. இதனால் (சிறிலங்காவிற்கு) ஒரு பலம் கிடைத்தது. இதை அறிந்த நாம், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு, உண்மை நிலவரத்தை விளக்கி தகவல்களை அனுப்பினோம். நீங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தது வேதனையை அளிக்கிறது என்று கூறியிருந்தோம். அதைப் படித்த பத்திரிக்கையாளர்களில் முக்கியமானவர்கள் கூட, இதில் ஒரு பகுதி கூட எங்களுக்குத் தெரியாதே, இதனை ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்த்து தர முடியுமா என்று கேட்டு, அதை பல நாட்டு அமைப்புகளின் மூலம் இரண்டு கடிதங்கள் மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு யுகேஷியாவின் அரசியல் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள், இதுபோன்ற ஒரு நிலை அங்கு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதே, தெரிந்திருந்தால் நிச்சயம் நாங்கள் இலங்கையைக் கேள்வி கேட்டிருப்போம் என்று கூறினார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டதே...

Thursday, April 30, 2009

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள்:அதிர்ச்சி தகவல்













கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள
(secrete jails in kilinochi, srilanka.)

( Since this message has to reach all over the world, I tried in english. Please forgive me for any mistakes.)

The youths aged between 15 to 35 (both male and female) have been kept house arrest in kilinochi areas. The civilians who and all comming to army camps are seperated into males and females. If army gets any doubt about these civilians, then they were arrested in the separate houses. These arrested peoples are made naked. They have been made nude, so as they won't try to escape from the camps. They have been provided food for once in a day. Even for urinals atleast two should go at a time. The young ladies are suffering more in camps. they have been used for sex in camps. These peoples are truely civilians. This kind of arrest is very secret.
(This photo has been given by a srilankan singala friend who can't able to bare this(Even though he is singala he can't bare this ie he is human, ie true singalan).
கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும், ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்ல வழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இராணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் மக்களாகிய நீங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்.




Thursday, March 5, 2009

இன படுகொலை தொகுப்பு - 1

உங்கள் பொழுது போக்கு நேரங்களை (மனித குலத்திற்கு) பயன் அளிக்கும் வைகையில் செலவிடுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
1 ) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - 1

2) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - 2

3) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - ௩.
( killed and Hanged childrens) - ***( childrens killed, raped, orphanage attack, starvation to death 600,000 )

4) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - 4
( we can't digest this " you shot my father raped and killed my mother, hanged my brother, tortoured and killed my sister. I have nothing left. When I decide to leave this planet, I will take you with me" ) Who is responsible for this ???

5) Sri Lanka - Humanitarian Crisis in Tamil Areas - 5
6) How Sinhalas r mass killing Unarmed Tamils: Colombo & Jaffna (Abduction of tamils 5000 in 12 months)

7) Air bombing [ Sri Lankan Govermment Terrorism ] - School Childrens Attack :

8) Sri Lanka State Terrorism Unleashed on Tamil orphanage

9) Sri Lanka Kills Tamil Children

10) 53 School girls killed in 2006 SLAF bombing, remembered-1of2

11) 53 School girls killed in 2006 SLAF bombing, remembered-2of2

12 ) Crisis in Tamil EELAM ( North west SriLanka)

13 ) Crimes & Terrorism done by the Sri Lankan Government

14 ) Sri Lanka: The Killing Field for Tamils

15) Sri Lanka Battle front - Killing Tamils with MBRL

16) umanateri humanaterian crisis in vanni - part - one

17) Humanitarian Crisis in Vanni due to bombing & shelling of SriLankan forces

18 ) VIOLENCE IN SRI LANKA PART 2 (1983- Black July)

19 ) Humanitarian Crisis in Vanni - Sep-01-2008

20 ) Srilankan force brutal attack (and rape) on Tamil Women

21 ) Army attack in Matthalan
( சிறிலங்கா மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையின் இன்றைய காட்சிகள் - (எச்சரிக்கை: படங்கள் கோரமான காட்சிகளைக் கொண்டவை)
22 ) சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//இந்த வீடியோ
காட்சி

எனக்கு கிடைத்த தகவலை பரிமாறி உள்ளேன். உங்களிடம் நிறைய தகவல் இருக்க வாய்ப்புண்டு. தாங்களிடம் உள்ள தகவலை பிண்ணுடம் மூலம் அனுப்பி வையுங்கள். முடிந்தால் மற்றவர்களுக்கு மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வையுங்கள். " நாம் ஒருவர் அனுப்பி என்ன ஆக போகுது" என்று நினைக்க வேண்டாம். ஒவ்வேருவருடைய செயலுக்கும் நேரகவோ , மறைமுகமாகவோ விளைவு உண்டு. நானும் அப்படிதான் நினைத்தேன். வட இந்தியர் ஒருவருக்கு மின் அஞ்சல் மூலம் தெரிய படுத்தியவுடன் அவர் சொன்ன வார்த்தை " இவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருப்பது" எனபது எங்களுக்கு தெரியாது. நேரில் அவரிடம் வரலாறை விளக்கிய பிறகு அவர் தமிழர்களின் நிலையை புரிந்து கொள்ள ஆரம்பித்தார். இதற்க்கு முன்னால் தமிழர்கள் இலங்கைக்கு சென்று அங்கே உரிமை கேட்கிறார்கள்" என நினைத்தார் எனபது முக்கியம்.அங்கே உள்ள செய்தி தால்களும் தெரிவிப்பதில்லை. ஏன் நம்ம உடகங்களின் ( ஒரு சில தவிர) போக்கே அப்படிதான் இருக்கிறது. நிறைய உண்மைகள் மறைக்க படுகின்றன. திசை திருப்ப படுகின்றன. தயவு செய்து முடிந்தவரை மற்றவர்களிடம் விளக்க முயற்சியுங்கள். உங்கள் முயற்சிக்கும், நேரம் செலவிட்டமைக்கும் நன்றி. நிறைய நேரங்களில் தேவையில்லாத நிறைய விசியங்களுக்கு நாம் செலவிடும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.