Thursday, May 20, 2010

இந்தியா

We live in a nation ,

  • where Pizza reaches home faster than Ambulance police,
  • Where you get car loan @ 5% and education loan @ 12%,
  • Where rice is Rs 40/- per kg but sim card is free,
  • Where a millionaire can buy a cricket team instead of donating the money to any charity,
  • Where the footwear, we wear ,are sold in AC showrooms, but vegetables, that we eat, are sold on the footpath,
  • Where everybody wants to be famous but nobody wants to follow the path to be famous,
  • Where we make lemon juices with artificial flavours and dish wash liquids with real lemon.
  • Where people are standing at tea stalls reading an article about child labour from a newspaper and say,"yaar bachhonse kaam karvane wale ko to phansi par chadha dena chahiye" and then they shout "Oye chhotu 2 chaii laao....."
Incredible India

Friday, May 14, 2010

சுமை

உன் பிஞ்சு கரங்களால்
என் கன்னத்தில் அறைந்த போது -அன்று
துள்ளி குதித்தேன் , உன் மென்மை பாதங்களினால்
எட்டி உதைத்தபோது -அன்று
எண்ணி மகிழ்ந்தேன் ,உன் பஞ்சு போன்ற உதடுகளால்
என்னை முத்தமிட்ட போடு -அன்று
கொஞ்சி விளையாடினேன் ,உன்னை கைத்தாங்கலாக தூக்கி
என் முதுகில் சுமந்த போது - அன்று
இன்ப சுமையாய் கருதினேன் ,இன்று நீ வளர்ந்த பிறகு
என்கன்னதில் அறைவதும்,என் மார்பினில் எட்டி உதைப்பதும்,என் முகத்தினில் துப்புவதும்
முதுகினில் குத்துவதும் குட வலிக்கைவில்லை மகனே
என் முதுமைஇன் இயலாமை ,உன்னக்கு சுமை என்று கூறினாயே
அதுதானட என் உள்மனதினில்
ஆராத வலியாக இன்றும் வலித்துக்கொண்டு இருக்கிறது ...


நன்றி : இந்த கவிதையை என் நண்பர் சுமோ எழுதி இருக்க வாய்ப்பு இல்லை ஆனால் சுட்டு கொண்டு வந்து என்னிடம் கொடுத்ததற்கு நன்றி.

நன்றி மீண்டும் தருக .

பின் குறிப்பு : சுமோ னா சுண்டக்கஞ்சி மோதிரம் னு நினைசிங்கான அதுக்கு எங்க கம்பெனி பொறுப்பு இல்ல அவர் பெயர் சும்மா மோதிப்பார் னு அவர் சொல்லுறார் )

Wednesday, May 5, 2010

தமிழா! நீ பேசுவது தமிழா…

கவிஞர் காசி ஆனந்தன்’

தமிழா! நீ பேசுவது தமிழா…

அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை…
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை…
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை…

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்காபாட்டி
உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?

Monday, May 3, 2010

விட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்!’

விட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்!’

காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…


-கமல்ஹாசான்

ஈழத் தமிழர்களின் வலியைப் பதிவு செய்ய ‘போருக்கெதிரான பத்திரிகையாளர்கள்’ உருவாக்கியுள்ள ‘மௌனத்தின் வலி’ புத்தகத்தில்…

ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS

ஆரோக்கியம் / உடல் நலம் ]

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

சமூகம்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

வாழ்க்கை

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

நன்றி Sabarinath.S