Saturday, July 31, 2010

"நம்பிக்கையுடன் " என்ற புத்தகத்தில் இருந்து ...

சில பக்கங்கள் ..."நம்பிக்கையுடன் " என்ற புத்தகத்தில் இருந்து ..

" தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்

சித்தாந்தம்....

நிலவை தொட்டது

மூன்று தோல்விகளுக்கு

பிறகு தான் ".....


"சதா யோசி

மூளை ஒரு மிருகம்

தீனி போட்டுக் கொண்டே

இருக்க வேண்டும் ..

இல்லாவிட்டால் அது

தீயதைத் தின்று விடும் "


"உலகை

உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்

துவக்கத்தில் ஒரு

தூசுப் படலமாக

இருந்தவன் தான் "


" ஒன்றைக் கவனித்துக்கொள்

இறங்கிப் போவதால்

என்றுமே நாம்

தாழ்ந்து போக மாட்டோம்


பள்ளத்தில் நதி

இறங்கிப் போகிறது

அதனால் அது மேடுகளில்

அசாதாரணமாகப்

பாய்கிறது "


" செய்ய நினைப்பதே

செய்வதினுடைய

பாதி வெற்றி தான்

எடுக்கும் முடிவை

உடனே செயல்படு

முடியும் -முடிவும்

போகப்போக

நரைத்துப் போகக் கூடியவை ..."


நன்றி : Abdul Hakim.S

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice, thanks for sharing

Anonymous said...

//சதா யோசி
மூளை ஒரு மிருகம்
தீனி போட்டுக் கொண்டே
இருக்க வேண்டும் ..
இல்லாவிட்டால் அது
தீயதைத் தின்று விடும் " //

அழகிய வரிகள்

முதல் முறை வருகிறேன்..
பதிவுகள் அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்

Unknown said...

ராம்ஜி_யாஹூ, Indhira

அனைவருக்கும் நன்றி