Thursday, February 14, 2013

காந்திய வழியில் நடப்பவர்களா காங்கிரஸ் காரர்கள் ?


1) காந்திய வழியில் நடப்பவர்கள் என்றால்... எத்தானை காங்கிரஸ் காரர்கள் சில்லி சிக்கன் மட்டன் பிரியாணி , மீன் ப்ரை உண்ணாமல் சைவம் சாப்பிடுகிறவர்கள்?

2) அவர் குடும்பங்களில் எத்தனை பேர் சைவம் ?
 அவ்வாறாக இல்லை என்றால் அகிம்சையை பின்பற்றாத அவரும், அவர்கள் குடும்பம்மும்  இப்படி இருக்க , எப்படி மேடை ஏறி பேச முடிகிறது ? காந்தியின் கதரை கட்டி கொண்டு வலம் வர முடிகிறது ? காந்தியின் படத்தை வைத்து
ஓட்டு கேக்க முடிகிறது ?

3) காந்தியுன் அகிம்சை உண்மை என்றால் "மரண தண்டனை" என்ன ?

4) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் எப்படி ஊழலில் ஈடுபடுகிறார்கள் ?

5) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் மது அருந்தாத காங்கிரஸ் காரர்கள் எத்தனை பேர் ?

6) காந்தியவாதியகவும் காங்கிரஸ் காரர் ராக தொப்பி , ஜுப்ப உடன் திரிந்த கிழ வயது N  T திவாரி ( முன்னால் ஆந்திர ஆளுனர் ) பெண்களுடன்  உருண்டு பிரண்டது ஏனோ ? (இவர் அடிமட்ட தொண்டர் இல்லை இவர் மதிப்பிற்குரிய  தலைவர்களில் ஒருவர் )

7) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் இந்திர காந்தி அம்மையார் கொலையுண்ட போது சீக்கியர்களை தாக்கி , பலரை கொலை செய்தது ஏனோ ?

8) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால், அகிம்சை வாதிகள் என்றல் ராஜீவ் காந்தி கொலையுண்ட போது வன்முறையில் ஈடுபட்டது ஏன் ?

வாய்ப்பு ஒன்று தான்  இறுதி என்றால் இதற்க்கு ஏன் காந்தி போட்டோ, காதர் ...

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் ?


No comments: