Tuesday, August 12, 2014

நல்ல திட்டுங்க


“ ஈழத்தில் நடந்தது போர் குற்றம் அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...

“ஈழத்தில் நடந்தது இன படுகொலை அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...

“ ராஜபக்சே செய்தது சரியே “ 
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும்

ஈழ தமிழகளுக்கு சம உரிமை பற்றி வாய் திறக்காத ஓநாய்களும், தந்திர நரிகளும்...

தமிழ் உணர்வையும் , இருக்கிற கொஞ்ச நஞ்ச உணர்வாளர்களையும்
ஒடுக்க


சூழ்ச்சி செய்ய தக்க தருணம் பாத்து காத்து கொன்டிருந்த

ஓநாய் களுக்கு 


நல்ல வாய்ப்பு
சீமான் பற்றி அவதூரு பரப்புரை செய்ய

எதற்க்கெடுத்தாலும் லைக் போட்டு share  செய்யும்  facebook  தமிழர்களே!


நல்ல திட்டுங்க

சீமான் னையும் ,

 நெடுமாறனையும்,

 வைகோவையும் ..

உங்கள் கொள்ளு பேரனுக்காக காத்திருகிறது ....


ஸ்டாலலினின்  கொள்ளு பேரன்
தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிர பிரதமருக்கு கடிதம் ,

ஸ்டாலலினின்  கொள்ளு பேரன் 1 மணி நேர உண்ணாவிரதம் ,

ஸ்டாலலினின்  கொள்ளு பேரன் கொட்டும் மலையில்

ஈழ தமிழருக்காக மனித சங்கிலி னு ...

மதவாதிகள்!

மதவாதிகள்!

காற்றுக்கு வர்ணம் பூச துடிப்பவர்கள் .

செந்தில் 
13/08/2014

Monday, December 2, 2013

வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம்

என் சாதி காரன் நீதிபதியா வேனும் ! 

என் சாதி காரன் IAS a வேனும் ! 

என் சாதி காரன் top 10 சீனியர் லாயர் ல ஒருவர் வேணும் !

என் சாதி காரன் IG யா வேணும் !

என் சாதி காரன் முதலமைச்சரா வேணும் !

என் சாதி காரன் மத்திய மந்திரியா வேணும் னு 

வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் சொல்றதுடைய நியாயம் 
சங்கர ராமன் கொலைவழக்கு ஒரு நேரடி சாட்சி !

Share Please 
Senthil kumar

Friday, March 22, 2013

ஜெனிவா யில் இலங்கை எதிராக நவநீதம்பிள்ளை பேசி உரை:-


ஜெனிவா யில் இலங்கை எதிராக நவநீதம்பிள்ளை பேசி உரை:-

1.இலங்கையில் நடத்தது இனப்படுகொலை.

2.2009 யில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது அதிகமான போர் குற்றம் செய்து உள்ளது .
 ...
3.இலங்கை ராணுவம் பெண் மற்றும் குழந்தைகளை அதிகமாக கற்பழிப்பு மற்றும் கொலை வெறியாக செய்து உள்ளது.

4.இறுதி கட்ட போரில் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் .

5.இலங்கை அரசிடம் சரண் அடைந்தவர் கூட கொல்லப்பட்டன்.

6.டிவி சேனல்-4 யில் கூட அங்கு அனைத்து செய்திகளும் தெளிவாக அளித்து உள்ளது.

7.இலங்கை அரசு மீது பன்னாட்டு நாட்டு விசாரானை வைக்க வேண்டும்.

8.அந்த விசாரானையில் மனித உரிமை யில் பல நாடுகளில் உறுப்பினர் குமு அமைக்க வேண்டும் .

9.பாலசந்தர் என்ற இளம் குழந்தை கொலை செய்த இலங்கை அரசு மீது முமு நடவடிக்கை வைக்க வேண்டும்.

10.இலங்கையில் பல லட்சம் தமிழர்களின் மண்டை ஒடுகள் இதற்கு சான்று என கூறினார்.

நவநீதம் பிள்ளைக்கு நன்றி..!

Wednesday, February 27, 2013

சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம்

ஜூனியர் விகடன் (27.02.13)

சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி


‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது?

ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள்.

உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்ம்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்களை எடுத்த இரண்டு சிங்களப்படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்பட்டவை. அவர்கள் இருவரும் 53ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.

எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் ரகசியமாக எடுத்தவைதான்.

இறுதிக்கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

2009 மே மாதம் 18-ந் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் ராணுவம் கொளுத்தியது. அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்திருக்கிறார். காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53ம் படையில் சரணடைந்தனர்.

மே 19ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர். சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்.

கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கிறார். ‘அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பிவிட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்து விடலாம். எல்லோரையும்போல அவனையும் கொன்று விடலாம்’ என்று கோத்த பாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்.

அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவதும்தான் அந்த படைப்பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்று விட்டனர்.

பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது.

கே: பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா?

ப: பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். ‘நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும் போது இடையில் அம்மாவைக் காணோம். அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டியபோதுகூட, தன்னைச் சுடப்போசிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை.

கே: வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே?

ப: அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத்தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை... உண்மை... உண்மை. இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நோ பயர் ஸோன்’ தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். கடைசிக் கட்டப்போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். அவர் சொல்கிறார்.

இந்த நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பின் சோகம் இது. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப்போனார்கள்.

தமிழ் மக்கள் கூட்டம் ராணுவத்திடம் சரணடைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது ராணுவம். வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர்.

வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து சென்று தாக்கும். உலக நாடுகள் எதுவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தாது. ஒயிட் பாஸ்பரஸ் அதைவிடக் கொடூரமானது. ஒரே ஷாட்டில் 100க்கு மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் சுற்றியிருக்கும் எல்லா ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக் கொண்ட பிறகுதான் வெடிக்கும். அதனால் குண்டு பாதிப்பையும் தாண்டி பலர் மூச்சுத் திணறியே இறந்தனர். சானல் 4 வெளியிட்டு இருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் உதாரணங்கள் மட்டும்தான். ஒட்டு மொத்தமும் வெளிவந்தால், இலங்கை தாங்காது.

-- Courtesy :ஜூனியர் விகடன் (27.02.13) via Andy Robert

Thursday, February 14, 2013

காந்திய வழியில் நடப்பவர்களா காங்கிரஸ் காரர்கள் ?


1) காந்திய வழியில் நடப்பவர்கள் என்றால்... எத்தானை காங்கிரஸ் காரர்கள் சில்லி சிக்கன் மட்டன் பிரியாணி , மீன் ப்ரை உண்ணாமல் சைவம் சாப்பிடுகிறவர்கள்?

2) அவர் குடும்பங்களில் எத்தனை பேர் சைவம் ?
 அவ்வாறாக இல்லை என்றால் அகிம்சையை பின்பற்றாத அவரும், அவர்கள் குடும்பம்மும்  இப்படி இருக்க , எப்படி மேடை ஏறி பேச முடிகிறது ? காந்தியின் கதரை கட்டி கொண்டு வலம் வர முடிகிறது ? காந்தியின் படத்தை வைத்து
ஓட்டு கேக்க முடிகிறது ?

3) காந்தியுன் அகிம்சை உண்மை என்றால் "மரண தண்டனை" என்ன ?

4) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் எப்படி ஊழலில் ஈடுபடுகிறார்கள் ?

5) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் மது அருந்தாத காங்கிரஸ் காரர்கள் எத்தனை பேர் ?

6) காந்தியவாதியகவும் காங்கிரஸ் காரர் ராக தொப்பி , ஜுப்ப உடன் திரிந்த கிழ வயது N  T திவாரி ( முன்னால் ஆந்திர ஆளுனர் ) பெண்களுடன்  உருண்டு பிரண்டது ஏனோ ? (இவர் அடிமட்ட தொண்டர் இல்லை இவர் மதிப்பிற்குரிய  தலைவர்களில் ஒருவர் )

7) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால் இந்திர காந்தி அம்மையார் கொலையுண்ட போது சீக்கியர்களை தாக்கி , பலரை கொலை செய்தது ஏனோ ?

8) காங்கிரஸ் காரர்கள் காந்தியவாதிகள் என்றால், அகிம்சை வாதிகள் என்றல் ராஜீவ் காந்தி கொலையுண்ட போது வன்முறையில் ஈடுபட்டது ஏன் ?

வாய்ப்பு ஒன்று தான்  இறுதி என்றால் இதற்க்கு ஏன் காந்தி போட்டோ, காதர் ...

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் ?